“நான் செத்துப் பொழச்சவன்டா..!”- புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராக்கி ஸ்டாலோன்
ஹாலிவுட் பிரபலம் சில்வஸ்டர் ஸ்டாலோன் மரணமடைந்துவிட்டதாகப் பரவிய செய்திகளுக்கு 'புரளி' என முற்றுப்புள்ளி வைத்துள்ளார் 'ராக்கி' ராம்போ.
அமெரிக்காவில் ஹாலிவுட் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து தற்போது தயாரிப்பாளராக ஜொலிப்பவர் சில்வஸ்டர் ஸ்டாலோன்.
ராக்கி, ராம்போ என அதிரடி தொடர் படங்கள் ஆகட்டும் எக்ஸ்பென்டபிள்ஸ், எஸ்கேப் ப்ளான் என அதிரடித் திரைப்படங்களாகட்டும் தனது 'சிக்ஸ் பேக்' கட்டுடலுடன் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நிலைநின்றவர். 20-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரையில் உள்ள ரசிகர்கள் என அமெரிக்காவிலிருந்து ஆண்டிப்பட்டி வரையில் ரசிகர்கள் வைத்திருப்பவர் 'ராக்கி' ஸ்டாலோன்.
இவர் இன்று காலை 'ப்ரொஸ்டேட் புற்றுநோய்' தாக்குதலால் மரணமடைந்துவிட்டதாகத் தகவல்கள் பரவின. ஆனால், மரண செய்தி வெறும் புரளி என சில்வஸ்டர் ஸ்டாலோனே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், "நான் செத்துப் பொழச்சவண்டா.." என்ற ஸ்டேட்டஸ் உடன் தனது குழந்தைகளுடன் விளையாடும் ஒரு ஜாலி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
You'r reading “நான் செத்துப் பொழச்சவன்டா..!”- புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராக்கி ஸ்டாலோன் Originally posted on The Subeditor Tamil
More Cinema News