கவுதமி சொன்னது சரி சம்பள பாக்கியை கம்பெனி பார்க்கும் - கமல்

கவுதமிக்கு சம்பள பாக்கி இருப்பது உண்மையாக இருந்தால் அதை கம்பெனி அவருக்கு வழங்கும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Feb 27, 2018, 18:43 PM IST

கவுதமிக்கு சம்பள பாக்கி இருப்பது உண்மையாக இருந்தால் அதை கம்பெனி அவருக்கு வழங்கும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்த நடிகை கவுதமி, “கமலுடன் இணைந்து செயல்பட்டபோது அவருடைய ராஜ்கமல் பட நிறுவனத்துக்காக தசாவதாரம், விஸ்வரூபம் படங்களிலும் பணியாற்றினேன். ஆனால் அந்த படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை” என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீதேவியின் மரணத்தை அடுத்து அவர்களது குடும்பத்தாரிடம் ஆறுதல் சொல்வதற்காக நேற்று தினம் மும்பை சென்றிருந்த அவர், இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், கவுதமி குறித்த கேள்விக்கு, ”எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லை என்று கவுதமி கூறுவது சரிதான். சம்பள பாக்கி இருப்பது உண்மையாக இருந்தால் அதை கம்பெனி அவருக்கு வழங்கும். அதற்கென அங்கு அதிகாரிகள் உள்ளனர். அந்த விவகாரத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்றார்.

You'r reading கவுதமி சொன்னது சரி சம்பள பாக்கியை கம்பெனி பார்க்கும் - கமல் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை