அண்ணன் தங்கையாகப் பழகி வந்தோம்- ஶ்ரீதேவி குறித்து உருகும் கமல்!

by Rahini A, Mar 2, 2018, 09:12 AM IST

மறைந்த நடிகை ஶ்ரீதேவி உடனான தனது பாசம் குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று 80-களில் பலரின் இதயங்களைக் கொள்ளையடித்தவர் நடிகை ஶ்ரீதேவி. சமீபத்தில் இவர் மறைந்த பின்னர், ஶ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு இணையாக அவருடன் பயணித்த இதர உறவுகளும் ஶ்ரீதேவி குறித்த தங்களது நினைவுகளைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஶ்ரீதேவி குறித்து கமல் கூறுகையில், "1980 கால கட்டங்களில் கமல்- ஶ்ரீதேவி போன்று என நிஜ வாழ்க்கை ஜோடிகளைப் புகழ்வர். அந்தளவுக்கு எங்களது சினிமா வாழ்க்கையில் எங்களது கதாப்பாத்திரம் பேசப்பட்டது. ஆனால், நிஜ வாழ்க்கையில் ஶ்ரீதேவியும் நானும் அண்ணன் தங்கையாகவே பழகி வந்தோம். ஶ்ரீதேவியின் நடிப்பைப் பார்க்கும்போது என்னைப்போலவே இருக்கும். மூன்று முடிச்சு திரைப்படத்தில் நானும் ரஜினியும் நடித்தப் படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகிய ஶ்ரீதேவிக்கு 13 வயது. ஒரு 13 வயதுச் சிறுமி பாலிவுட்டின் கனவுக்கன்னியாக உருவாகிய வரையில் நான் அவருடன் இருந்தே பார்த்து வந்தவன், வியந்தவன். இன்று அவர் குறித்த ஒவ்வொரு நினைவுகளும் என் மனதில் மீண்டும் வந்து நிலைகுத்தி நிற்கிறது" என வருத்தங்களுடன் பகிர்ந்துள்ளார்.

You'r reading அண்ணன் தங்கையாகப் பழகி வந்தோம்- ஶ்ரீதேவி குறித்து உருகும் கமல்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை