திருமணத்திற்கு பிறகு ரீல் ஜோடியாகும் சமந்தா-நாக சைதன்யா

Mar 8, 2018, 19:27 PM IST

பிரபல நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு, தனது கணவர் நாக சைதன்யாவுடன் முதன் முதலில் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதன் மூலம், ரியல் ஜோடி விரைவில் ரீல் ஜோடியாக படம் ஒன்றில் நடிக்கவுள்ளனர்.

தமிழ், தெலுங்கு படங்களில் பிரபலமானவர் நடிகை சமந்தா. சமந்தாவுக்கும், நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காதல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும், சமந்தா நடித்து வருகிறார். தமிழில் குறிப்பாக, விஷாலுடன் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய்சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் மற்றும் நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு முன்பு, நாக சைத்தன்யாவுடன் நான்கு படங்களில் நடித்து இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யாவும்&சமந்தாவும் ஜோடியாக நடிக்க உள்ளனர். முழுக்க முழுக்க ரொமான்ஸ் படமான இதனை இயக்குனர் ஷிவ் நிர்வணா இயக்குகிறார். ஷைன் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

You'r reading திருமணத்திற்கு பிறகு ரீல் ஜோடியாகும் சமந்தா-நாக சைதன்யா Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை