ஶ்ரீதேவிக்கு சென்னையில் அஞ்சலி! கபூர் குடும்பத்துடன் இணைந்து நடத்திய கோலிவுட்
மறைந்த நடிகை ஶ்ரீதேவிக்கு சென்னையில் நேற்று இரங்கல் பிராத்தனைக் கூட்டம் நடைபெற்றது.
கோலிவுட் முதல் பாலிவுட் வரையில் 1980-களில் இளைஞர்களின் கனவுக்கண்ணியாகத் திகழ்ந்தவர் நடிகை ஶ்ரீதேவி. சில நாள்களுக்கு முன்னர் எதிர்பாராத ஒரு விபத்தால் துபாயில் காலமானார். இவரது இறுதி அஞ்சலி மஹாராஷ்டிரா அரசால், அரசு இறுதி அஞ்சலி ஊர்வலமாக நடத்தப்பட்டது. இதன் பின்னர் நேற்று தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நேற்று பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் பிராத்தனைக் கூட்டத்தில் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு ஶ்ரீதேவிக்கு தங்கள் அஞ்சலியை அளித்தனர்.
காலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. மாலையில் நடிகர்கள் சூர்யா, அருண் விஜய், பிரபுதேவா, நடிகைகள் ராதிகா, மீனா எனப் பலரும் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com
You'r reading ஶ்ரீதேவிக்கு சென்னையில் அஞ்சலி! கபூர் குடும்பத்துடன் இணைந்து நடத்திய கோலிவுட் Originally posted on The Subeditor Tamil
More Cinema News