பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம்: உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
ஆலங்குடி பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவத்திற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் உள்ள பெரியார் சிலையின் தலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமழிகம் முழுவதும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
இந்த சம்பவத்திற்,கு திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாகவும் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், “ பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல. தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம் ! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், லட்சமாய் முளைத்து எழுவார்கள் ! உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள், நேரம், இடம் குறித்துவிட்டு வா ! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம்: உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் Originally posted on The Subeditor Tamil
More Cinema News