நான்கு வருட தெய்வீக காதல்.. பெற்றோர் சம்மதத்துடன் காதலரை கரம் பிடித்த நடிகை..

by Logeswari, Jan 11, 2021, 18:35 PM IST

முதன் முதலாக தமிழ் சினிமாவில் பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் ஆனந்தி. இந்த திரைப்படத்தில் சாக்லேட் பாயான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்த்து நடித்திருந்தார். இப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு கயல் என்ற படத்தில் நடித்தார். பொறியாளன் திரைப்படத்தை விட கயல் திரைப்படம் இவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்று தந்தது. இதன் பிறகு இவர் கயல் ஆனந்தி என்றே வழங்கப்பட்டார்.

பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி வீரன், விசாரணை போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து கலக்கியவர். 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளியானது. இதில் இவர் கதாநாயகியாக நடித்திருந்த தோற்றம் மற்றும் அவரது நடிப்பு மிகவும் பரபரப்பாய் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கவுரவ கொலை பற்றிய தொகுப்பாய் இப்படம் இடம்பெற்று இருந்தது. இதனால் இப்படத்திற்கு அளவில்லாத விருதுகள் குவிந்தது.

இந்நிலையில் இவருக்கு ஜனவரி 7ஆம் தேதி இரவு 8 மணிக்கு தெலங்கானா மாப்பிள்ளையை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருடன் ரகசிய திருமணம் நடைபெற்றது. தற்பொழுது இவர்களது திருமணம் பற்றிய தகவல்கள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. அதாவது ஆனந்தி மற்றும் சாக்ரடீஸ் இருவரும் நான்கு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதனை அவர்களது வீட்டில் தெரிவித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் திருமணம் ஆன பிறகும் திரைப்படத்தில் நடிப்பேன் என்று நடிகை ஆனந்தி கூறியுள்ளார்.

You'r reading நான்கு வருட தெய்வீக காதல்.. பெற்றோர் சம்மதத்துடன் காதலரை கரம் பிடித்த நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை