பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரம் மாற்றமா?? தீயாய் பரவும் செய்தி..

by Logeswari, Feb 8, 2021, 20:47 PM IST

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கலக்கி கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரையும் தன் பக்கம் இழுத்துள்ளது. கூட்டு குடும்பமாய் வாழ்வதில் உள்ள நன்மைகளை எதார்த்தமாக கூறும் கதை ஆகும். முல்லை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜே சித்ரா அவர்கள் டிசம்பர் 9 ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் முல்லை கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவாக நடித்திருந்த காவ்யாவை புது முல்லையாக அறிமுகம் செய்தனர். புது முல்லையாக காவ்யா நடித்தபோது பல விமர்சனங்கள் பெற்றார். இருப்பினும் நாட்கள் செல்ல செல்ல காவ்யாவின் நடிப்பு மக்களுக்கு பிடித்து விட்டது. மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு கயல் என்னும் தேவதையை கொண்டு வந்தார். கயல் பாப்பாவுக்கு பல ரசிகர்கள் பட்டாளம் சோசியல் மீடியாவில் உலாவி வருகிறது. தற்பொழுது வீட்டுக்கு முத்த மருமகளான தனம் கர்ப்பமாகியுள்ளார்.

இந்நிலையில் முல்லைக்கு ஜோடியான கதிர் என்பவர் சில நாட்களாக சீரியலில் எட்டி பார்க்கவில்லை. கதிரை காணாததால் அவரின் ரசிகர்கள் கதிர் எங்கே என்று பல கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில் இவர் திரைப்படத்தில் நடிப்பதால் சீரியலில் நடிக்க நேரம் ஒத்துபோக வில்லையாம். இதனால் அவரது முழு நேரமும் திரைப்படம் பக்கம் திரும்பியுள்ளதால் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலக போவதாக தகவல் கிடைத்துள்ளது. இவருக்கு பதிலாக குக் வித் கோமாளி அஸ்வின் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

You'r reading பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரம் மாற்றமா?? தீயாய் பரவும் செய்தி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை