`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு!

by Sasitharan, Apr 7, 2021, 11:35 AM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய வடிவில் உருவாக்கப்பட்டு, அனைவரையும் கவர்ந்திழுத்த ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சி என்றாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். சொல்லப்போனால் முதல் சீசனைக்காட்டிலும், இரண்டாவது சீசனுக்குதான் மவுசு அதிகம். மக்கள் இதற்கு நல்ல வரவேற்பை கொடுத்தார்.

இதில் புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். முதலில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்கள். பின்னர் நடந்த வைல்ட் கார்டு ரவுண்டில் ஷகிலாவும், பவித்ரா லட்சுமியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.



கடந்த வாரம் செலிபிரட்டி வாரம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் ஃபைனலுக்கான எபிசோட்களும் சமீபத்தில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. இதில் நடிகர் சிம்பு அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்
குக் வித் கோமாளி சீசன் 2 ஃபைனல் முடிவுக்கு வந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத புகழ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மக்களையும் குக் வித் கோமாளி டீமையும் மிஸ் செய்கிறேன் என்றும் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் அழுகை வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தமிழில் கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து கன்னடம் மொழியிலும் உருவாக்கப்படுகிறது. அதிலும் மகேஷ் பட் நடுவராக கலந்து கொள்ள இருக்கிறார். தமிழில் மூன்றாவது சீசனுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

You'r reading `ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை