தமிழ்த் தேசிய பாடலை பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்!

by Ari, Apr 15, 2021, 19:59 PM IST

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியிருக்கும் மூப்பில்லா தமிழே தாயே பாடலில் தமிழ்த் தேசியம் இருப்பதாக கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

தாமரை தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, “ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துப் பாடியிருக்கும் மூப்பில்லா தமிழே தாயே என்கிற தனிப்பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஓரிரு மாதங்களுக்கு முன் ரகுமான் திடீரென்று அழைத்தார் என்றும், தமிழர்கள் சோர்ந்திருக்கும் இவ்வேளையில் உலகத் தமிழர்களை இணைக்கும், உற்சாகமூட்டும் வண்ணம் ஒரு சிறப்பான தமிழுக்கான பாடல் உருவாக்கும் எண்ணம் உள்ளதாக அவர் தெரிவித்ததாக கூறினார். அவர் சொன்னப்படி எழுதிய பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

புயல் தாண்டியே விடியல் என்று தொடங்கும் பாடலுக்கான தலைப்பாக மூப்பில்லா தமிழே தாயே என்பதைத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதி வடிவத்தில் நானும் இன்னும் கேட்கவில்லையாதலால் நானும் ஆவலோடு காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், பாடல் வெளியாகும்போது அது தொடர்பான செய்திகளைப் பகிர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியத்தில் கள அனுபவமும் எனக்கு உண்டு என்பதால் பல செய்திகளைப் பகிர்ந்தேன் என்றும், அதை ஒட்டியே வரிகளையும் எழுதினேன் என்றும் கூறியுள்ளார். பற்பல இரவுகளை அவரின் ஒலிக்கூடத்திலேயே கழித்தேன் என்றும், இன்றைய சூழலில் தமிழர்களை இசையால் இணைக்கும் கருப்பாடல் உருவானது எனவும் பாடலாசிரியர் தாமரை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


You'r reading தமிழ்த் தேசிய பாடலை பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை