யாருக்கும் உதவி செய்ய முடியாத சூழலில் இருக்கிறேன்- நடிகர் சோனுசூட் அதிர்ச்சி தகவல்..!

by Logeswari, Apr 19, 2021, 12:39 PM IST

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள். இந்த சூழலில் பலரும் மக்களுக்கு உதவி செய்தாலும் அனைவரின் மனதிலும் ஒரு ஸ்டாராக குடிபெயர்ந்தவர் தான் பாலிவுட் நடிகர் சோனுசூட். இவரிடம் யார் என்ன கேட்டாலும் அதை முதலில் நிறைவேற்றுவது தான் இவரது முதற்கட்ட செயலாக இருந்தது. இது நாளடைவில் இவரது முழு சொத்தையும் அடகு வைத்து கஷ்டப்படும் மக்களுக்கு பல நன்மைகளை செய்யும் அளவிற்கு வளர்ந்தது.

இதனால் மக்கள் அனைவரும் சோனுசூட்டை தலைமேல் வைத்து கொண்டாடினார்கள். இந்நிலையில் நயன்தாராவை அடுத்து சோனுவிற்கு அவரது அன்பு மிகுந்த ரசிகர்கள் அவருக்கென்று தனி கோவில் அமைத்தனர். இது நாடு முழுவதும் பரவலாய் பேசப்பட்டது. இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இவரது ரசிகர்கள் மிகுந்த துக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து இவர் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களாக எனது செல்போனை கீழே வைக்கவே முடியவில்லை. நாட்டில் இருக்கும் பலரிடம் இருந்து எனக்கு ஊசி, படுக்கை வேண்டும் என்று அழைப்பு வந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் தற்பொழுது என்னால் எந்த உதவியும் செய்யமுடியாத சூழலில் நிர்கதியாய் கிடக்கிறேன் என்று மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.

You'r reading யாருக்கும் உதவி செய்ய முடியாத சூழலில் இருக்கிறேன்- நடிகர் சோனுசூட் அதிர்ச்சி தகவல்..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை