பிறந்தநாளன்று அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கும் விஜய்..?
ரஜினி, கமல், ஆகியோர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். நடிகர் கமல் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை துவங்கி அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தும் விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்க இருக்கிறார். அதற்கான வேலைகளை முழுவீச்சில் நடத்திவருகிறார்கள் அவர்களது மக்கள் மன்ற பொறுப்பாளர்கள்.
இந்நிலையில் ரஜினி, கமலுக்கு அடுத்து ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதை அனைவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றால் அது இளைய தளபதி விஜய் மட்டுமே. இது வரை எந்த ஒரு நிகழ்வுகளிலும் தான் அரசியலுக்கு வருவேன் என்றோ அல்லது அரசியல் செய்வது பற்றியோ தளபதி விஜய் பேசியது இல்லை.
ஆனால் இவரை சுற்றி நடக்கும் செயல்கள் விஷயங்கள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல் படுகிறது. அது அரசியல் வட்டாரங்களாக அல்லது ரசிகர்கள் அல்லது சுற்றத்தாராக கூட இருக்கலாம்.
தற்போது வந்துள்ள செய்தி என்னவென்றால், இளைய தளபதி விஜய் ஜூன் 22 (விஜய் பிறந்தநாள்) அன்று அரசியல் பிரவேசம் குறித்து முடிவு எடுப்பார் என்று மதுரை மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தனது பிறந்தநாள் அன்று முக்கிய முடிவு எடுக்கிறார் ஜோசப் விஜய். தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார். விஜய் ரசிகர்கள் உற்சாகம், மக்கள் மகிழ்ச்சி. அரசியல் கட்சிகள் அதிர்ச்சி என்று போஸ்டர் அடித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading பிறந்தநாளன்று அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கும் விஜய்..? Originally posted on The Subeditor Tamil
More Cinema News