விஷாலுக்கு ஆதரவாக பார்த்திபன் கருத்து
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். அவருடைய வேட்பு மனு ஏற்கப்படவில்லை.
விஷால் மனு ஏற்கப்படாததற்கு அரசியல் தலையீடுதான் காரணம் என்று விமர்சனம் எழுந்தது. திரைப்பட துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஷால் மனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் திரைப்பட இயக்குனர், நடிகர் பார்த்திபன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகளை கடுமையாக தாக்கியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
யாகாவாராயினும் நாகாக்க, அன்னியர் மீது பல்போட்டு பேசிய வாக்கை காக்க.... எது பற்றியும் கவலை கொள்ளாமல் 64 வருடங்களாக இந்தியர்களின் வாக்குகளை கூட்டமாய் ஏப்பமிடும் காக்கைகளாக நம் அரசியல்வாதிகள். இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.
You'r reading விஷாலுக்கு ஆதரவாக பார்த்திபன் கருத்து Originally posted on The Subeditor Tamil
More Cinema News
READ MORE ABOUT :