புயலாய் மாறி சூப்பர் ஸ்டார் கோவத்திற்கு ஆளான பூ நடிகை

Jul 11, 2018, 17:07 PM IST

தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி, மலையாளத்தில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

மலையாள நடிகர் சங்கத்தை பற்றிய தனது கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கினார் பார்வதி. அதற்கு மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லாலின் கோவத்திற்கும் ஆளானார்.

சமீபத்தில் தான் மலையாள நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடிகர் மோகன்லால் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வேளையில் நடிகையை கடத்தி பாலியல் வழக்கில் கைதான நடிகர் திலீப்பை நடிகர் சங்க உறுப்பினராக சேர்த்ததற்கு மலையாள நடிகைகள் நடிகர் சங்கத்தின் மீது தங்களது விமர்சனங்களை வீசினர்.

பார்வதி மலையாள நடிகர் சங்கத்தின் ஒரு முக்கிய பதவிக்கு போட்டியிட முயன்றதாகவும், ஆனால் அதனை சிலர் தடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

பேட்டி ஒன்றில் மோகன்லாலிடம் பார்வதி குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பார்வதியை போட்டியிட வேண்டாம் என்று யார் தடுத்தது? என்னால் நம்ப முடியவில்லை. ஒருவேளை இது உண்மை என்றால் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு இது குறித்து தெரிவித்து இருக்கலாம். எங்களில் ஒருவர் பதவியை விட்டுக்கொடுத்து விலகி இருப்போம். பார்வதி விரும்பினால் அவருக்கான பொறுப்பை தர தயாராக இருக்கிறோம் என்றார் மோகன்லால்.

You'r reading புயலாய் மாறி சூப்பர் ஸ்டார் கோவத்திற்கு ஆளான பூ நடிகை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை