கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும்- நடிகர் சிவக்குமார் உருக்கம்

Aug 7, 2018, 23:38 PM IST
பெரியார், ராஜாஜிக்கு பிறகு புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும் என நடிகர் சிவக்குமார் உருக்கம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவக்குமார் விடுத்த இரங்கல் குறிப்பில், "டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் பெரியார் , ராஜாஜிக்கு பிறகு  95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர்  கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
 
பெரியார் - எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்.
 
அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக்காத்தவர் . அரசியலில் சாதித்ததற்கு இணையாக - கலை இலக்கியத்திலும்  60 ஆண்டுகளுக்கு மேல்  சாதனை புரிந்தவர் .
 
1950 களில்  தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர் .குறளோவியம் , சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா - போன்றவை அவரது புலமைக்குச்சான்றானது .
 
 பாசப்பறவைகள் , பாடாத தேனீக்கள் - அவர் வசனம் பேசி நடித்தேன் .
என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார் .
 
 சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் - கார்த்தி- முதல் படம் பருத்திவீரன் பார்த்து ஆசி கூறியவர் .தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும் . அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்". எனக் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும்- நடிகர் சிவக்குமார் உருக்கம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை