2.0 படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ்!
2.0 release the third song of the film
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தின் 3வது பாடல் வெளியாகியுள்ளது.
ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் இம்மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தை லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
ஷங்கரின் ட்ரீம் புராஜெக்டான இந்த படத்தில் ஹைடெக் தொழில்நுட்ப விஎஃப்எக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படம் முழுவதும் 3டி கேமராவிலேயே நீரவ் ஷா படமாக்கியுள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்ற ராஜாளி, எந்திரலோகத்து சுந்தரியே ஆகிய 2 பாடல்கள் ஓராண்டுக்கு முன்னரே ரிலீஸ் செய்யப்பட்டு வைரலாகின. இந்நிலையில், தீபாவளி சிறப்பு பரிசாக இப்படத்தின் மூன்றாவது பாடலான புல்லினங்காள் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் வெளியிட்டார்.
புல்லினம் என்பது பறவையை குறிக்கும். பறவையை நேசிக்கும் மனிதன் எப்படி அவற்றின் அழிவு உண்டாக்கிய மனித இனத்திற்கு எதிரியாகிறான் என்பதே 2.0 படத்தின் கதை என்பது இப்பாடலின் மூலம் புலனாகிறது.
இந்த பாடலில் அக்ஷய் குமாரின் பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறலாம் என கருதப்படுகிறது. விரைவில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு இப்பாடல் விருந்தளித்துள்ளது.
You'r reading 2.0 படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil
More Cinema News