வாய்ப்பு கேட்டு அலையும் பால சரவணன்!

BalaSaravanan asking chance in movie

Dec 13, 2018, 17:52 PM IST

பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமா விழாக்களில் எல்லாம் இயக்குனர்களிடம் பட வாய்ப்பு கேட்டுவருகிறார், பால சரவணன்.

விஜய் டிவியில் நாடகத்தில் நடித்து குட்டிப்புலி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் பால சரவணன். பிறகு பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங் போன்ற படங்களின் மூலம் வேகமாக வளர்ந்து சென்றார் பால சரவணன்.

இவர் தற்போது அதிக படங்களில் நடிப்பதில்லை, இதற்கு காரணம் இவர் ஒரு பேட்டியில் விஜய்க்கு நல்ல கதை தன்னிடம் இருகிறது என்று கூறினார். அதற்கு பிறகு இயக்குனராக வலம் வருவார் என செய்திகள் வெளியானது. அதன் விளைவாக இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது.

இதனால் தற்போது சினிமா விழாக்களில் கலந்துகொள்ளும் பால சரவணன் தனக்கு பட வாய்ப்பு வேண்டும் என்று அனைத்து இயக்குனர்களிடமும் கேட்டு வருகிறாராம்.

You'r reading வாய்ப்பு கேட்டு அலையும் பால சரவணன்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை