பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

VAO Suspended for sexual harassment to his daughter

by Subramanian, Apr 25, 2019, 11:53 AM IST

சேலத்தில் பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சோ்ந்வர் சரவணன் (வயது 42) அவர் கடம்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சரவணன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்ததையடுத்து அவர்கள் சரவணன் மீது போலீசில் புகார் கொடுத்ததாக தகவல்.

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சரவணன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணனை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பெற்ற மகளுக்கே தந்தை ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய மாடலிங் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

You'r reading பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வி.ஏ.ஓ. சஸ்பெண்ட் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை