காதல் மனைவியை சந்திக்க விடாததால் வாலிபர் தற்கொலை

கிருஷ்ணகிரியில் காதல் மனைவியை சந்திக்க விடாததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முருக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு சசிகுமார் (வயது 26), சதீஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சசிகுமார் பி.எஸ்.சி. வேளாண்மை படித்து விட்டு சொந்தமாக விவசாய பூச்சி கொல்லி மருந்துகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.

சசிகுமார் கல்லூரியில் படிக்கும்போது கிருஷ்ணகிரி ராஜாஜி நகரை சேர்ந்த நரசிம்மன்-ஜோதி தம்பதியினரின் மகள் ஜெயபிரியா என்பவரை காதலித்தார். இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சசிகுமாரும், ஜெயபிரியாவும் வீட்டை விட்டு சென்று கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது காதல் ஜோடி 2 பேரும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்டனர். பின்னர் இருகுடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி சசிகுமார் பெற்றோருடன் காதல் ஜோடி தம்பதியினரை அனுப்பிவைத்தனர். கடந்த 2 வருடங்களாக சந்தோசமாக சசிகுமாரும்- ஜெயபிரியாவும் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் படித்த சான்றிதழை வீட்டில் இருந்து எடுத்துவருவதாக கூறிவிட்டு ஜெயபிரியா தனது தாயார் வீட்டிற்கு சென்றார். ஆனால் 2 மாதங்களாகியும் அவர் திரும்பி வரவில்லை. சசிகுமார் உடனே கிருஷ்ணகிரிக்கு சென்று ஜெயபிரியாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கூறினார். அப்போது அவர்கள் சசிகுமாரை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி மீண்டும் கிருஷ்ணகிரியில் உள்ள நரசிம்மன் வீட்டிற்கு சென்று தனது மனைவியை சந்திக்க வேண்டும் என்றும்,அவரை தன்னுடன் அனுப்பிவைக்குமாறும் கூறினார். உடனே ஜெயபிரியாவின் உறவினர்கள் சசிகுமாரை தாக்கி வீட்டைவிட்டு துரத்தி அனுப்பினர். மேலும், கிருஷ்ணகிரி டவுன்போலீஸ் நிலையத்தில் சசிகுமார் வீடுபுகுந்து நகை திருடியதாக புகார் தெரிவித்தனர். இதனால் சசிகுமார் மனமுடைந்து காணப்பட்டார்.

கிருஷ்ணகிரியில் ஆசாத் நகரில் தனது தம்பி சதீஷ் ஒரு அறை எடுத்து கல்லூரியில் படித்து வருகிறார். அங்கு சென்ற சசிகுமார், யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கீழே விழுந்தார். சசிகுமார் மயங்கி கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்ட விசாரணையில் சசிகுமார் 3 பக்கம் கடிதம் எழுதி வைத்து விட்டு தான் அவர் வி‌ஷம் குடித்தது தற்கொலை தெரியவந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி சசிகுமாரின் உறவினர்கள் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் - வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds