தெலுங்கானாவில் 9 மாத கைக்குழந்தையை கொலை செய்த கொடூரன்..! பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்மஅடி

9 month baby murder in telugana

Jun 19, 2019, 17:30 PM IST

தெலுங்கானாவில் உள்ள அனுகோண்டாவில் தாபா வைத்து நடத்தி வருபவர் ஜெகன் அர்ச்சனா தம்பதியினர். இவர்கள் நேற்று இரவு தாபாவின் மாடியில் ஒன்பது மாத குழந்தை சிரிதாவுடன் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு முழிப்பு வந்து பார்த்தபோது பால் பாட்டில் மட்டும் உள்ள நிலையில் குழந்தையை காணவில்லை . இதனால் குழந்தையை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார் அர்ச்சனா. அப்போது அதே தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பார்த்த பொழுது பிரவீன் என்ற இளைஞர் குழந்தையை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

ஜெகன் அங்கு செல்வதற்குள் பிரவீன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரவீனை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து அனுமகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . பால் குடிப்பதை கூட மறக்காத 9 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கவேண்டும் என பொது மக்கள் முழக்கம் எழுப்பினர். 

- தமிழ்

பலான வேலைக்கு மறுத்த ‘பப்’ டான்சருக்கு அடி உதை; 4 பெண்கள் கைது, ஒருவர் ஓட்டம்

You'r reading தெலுங்கானாவில் 9 மாத கைக்குழந்தையை கொலை செய்த கொடூரன்..! பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்மஅடி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை