சென்னையில் பயங்கரம்: தனியார் நிறுவன பெண் ஊழியர் மீது ஆசிட் வீசி தீ வைப்பு

Feb 19, 2018, 17:19 PM IST

சென்னை: தனியார் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் பணிப்புரியும் பெண் மீது ஆசிட் வீசி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை நடத்திய அந்நிலைய உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர், வாணுவம்பேட்டை பகுதியில் சொந்தமாக தனியார் ரத்த பரிசோதனை மையம் நடத்தி வருகிறார். இங்கு, யமுனா என்ற பெண் பணியாற்றி வந்தார். யமுனாவிற்கு ராஜா தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கு யமுனா எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த யமுனா மீது ராஜா ஆசிட் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்நிறுவனத்தின் மற்ற ஊழியர்கள் உடனடியாக பலத்த காயமடைந்த யமுனாவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, யமுனாவிற்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக ராஜாவை கைது செய்தனர். மேலும், ராஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

You'r reading சென்னையில் பயங்கரம்: தனியார் நிறுவன பெண் ஊழியர் மீது ஆசிட் வீசி தீ வைப்பு Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை