பட்டப்பகலில் நடந்த கொடூரம்..! இளம்பெண்ணை ஆசை தீர கற்பழித்த 17 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..

by Logeswari, Dec 11, 2020, 12:50 PM IST

காய்கறி வாங்க கடைக்கு சென்ற இளம்பெண்ணை மர்ம நபர்கள் 17 பேர் சேர்ந்து வழிமறைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் டும்கா பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கு வயது ஏறத்தாழ 35 இருக்கும். தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்க கடை வீதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது தீடிரென வழிமறைத்த மர்ம நபர்கள் இளம்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். மொத்தம் 17 பேர் சேர்ந்த கும்பல் இளம்பெண்ணை கதற கதற கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தட்டு தடுமாறி இளம்பெண் எப்படியோ தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அங்கு அவரது கணவரிடம் நடந்தவற்றை அழுதுகொண்டே புலம்பியுள்ளார். மனைவிக்கு ஆறுதல் சொல்லிய கணவன் என்ன செய்வதென்று தெரியாமல் பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்கு மூலத்தை வாங்கி கொண்டு அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதித்தனர். போலீஸ் இளம்பெண்ணை பாலத்காரம் செய்த 17 பேர் சேர்ந்த மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

You'r reading பட்டப்பகலில் நடந்த கொடூரம்..! இளம்பெண்ணை ஆசை தீர கற்பழித்த 17 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.. Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை