அமெரிக்காவில் எல்லை தாண்ட முயன்றவர் சுட்டுக்கொலை

May 25, 2018, 21:26 PM IST
கடந்த புதன்கிழமை தெற்கு டெக்சாஸ் பகுதியில் சட்டவிரோதமாக புகுவதற்கு முயற்சித்த நபரை எல்லை காவல் வீரர் சுட்டுக் கொன்றார்.
லாரெடாவுக்கு தெற்கே ரியோ பிரவோ என்ற பகுதியில் பிற்பகல் 12:20 மணிக்கு இச்சம்பவம் நடத்ததாக அமெரிக்க எல்லை காவல் ரோந்து பிரிவின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
சட்ட விரோதமாக ஒரு கும்பல் உள்ளே புக முயல்வதை தெரிந்து கொண்ட எல்லை காவல் படை வீரர் அவர்களை தடுக்க முயன்றுள்ளார், அப்போது அவர்கள் ஆபத்தான ஆயுதங்களை கொண்டு வீரரை தாக்கியதால், தற்காப்புக்காக பாதுகாப்பு வீரர் சுட்டதில் ஒருவர் பலியானார். தப்பி ஓடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அமெரிக்காவில் எல்லை தாண்ட முயன்றவர் சுட்டுக்கொலை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை