சிறையில் பாக்சர் முரளி கொலை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!
முரளி கொலை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!
பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட போது, பணியில் இருந்த இரு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையில் ரவுடிகளிடையே ஏற்பட்ட மோதலில் பாக்சர் முரளி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறைக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை அனுமதித்தது, எதிர் கோஷ்டி என தெரிந்தும் இருவரும் ஒரே இடத்தில் சேரவிட்டது எப்படி என்பது குறித்த பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மேலும், போதிய காவலர்கள் பணியில் இல்லாததே, இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட போது பணியில் இருந்த தலைமை வார்டன் நாகராஜன், சிறை உதவியாளர் பழனிவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
You'r reading சிறையில் பாக்சர் முரளி கொலை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்! Originally posted on The Subeditor Tamil
More Crime News