அம்புப் படுக்கைக்கு சாகித்ய அகாடமி விருது!

by Rahini A, Jun 22, 2018, 15:43 PM IST

’அம்புப் படுக்கை’ என்ற சிறுகதை நாவலுக்கு 2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

’அம்பு படுக்கை’ என்ற சிறுகதை நூலுக்காக தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனுக்கு 2018ஆம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி யுவ புரஷ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது டெல்லியிலிருந்து வெளியாகி உள்ளது.

எழுத்தாளர்களைக் கவுரவப்படுத்தும் உயரிய சாகித்ய அகாடமி விருதுகளில் பால சாகித்ய புரஷ்கார் விருது 21 பேருக்கும், யுவ புரஷ்கார் விருது 21 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பால சாகித்ய புரஷ்கார் விருது வென்ற 21 பேருக்கும் வருகிற நவம்பர் மாதம் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தன்று விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவ புரஷ்கார் விருது வழங்குவதற்கான நாள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. யுவ புரஷ்கார் விருது நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விருது வென்ற இலக்கியங்களில் 10 கவிதை எழுத்தாளர்கள், ஏழு சிறுகதை எழுத்தாளர்கள், மூன்று நாவல் எழுத்தாளர்கள், மற்றும் ஒரு நாடக எழுத்தாளர் விருதுப் பட்டியலில் உள்ளனர்.

விருது வென்றோருக்கு செப்புப் பட்டயம் உட்பட 50ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading அம்புப் படுக்கைக்கு சாகித்ய அகாடமி விருது! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை