திருச்சியில் கார் மோதி பயங்கர விபத்து: 8 பேர் பலி
திருச்சி, சமயபுரம் அருகே, லாரி மீது கார் வேகமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து திருச்சிக்கு கார் ஒன்று குடும்பத்தினரை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. கார், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஓரமாக நின்றுக் கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில், குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடித்துடித்து உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் உயிர்பிழைத்த 4 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
You'r reading திருச்சியில் கார் மோதி பயங்கர விபத்து: 8 பேர் பலி Originally posted on The Subeditor Tamil
More Crime News