வகுப்பறையில் வைத்து மாணவியை கற்பழித்த ஆசிரியர்…! தருமபுரி அருகே அதிர்ச்சி…!

by Ari, Apr 24, 2021, 09:29 AM IST

தருமபுரி அருகே வகுப்பறையில் வைத்து பள்ளி மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் கூலிக்கொட்டாயில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது, கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயிற்சி புத்தகம் வாங்குவதற்காக மாணவி பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளார். அப்போது கணித ஆசிரியரான மல்லியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் எல்லா மாணாக்கர்களுக்கும் புத்தகங்களை கொடுத்துவிட்டு, இந்த மாணவியை மட்டும் காத்திருக்க செய்துள்ளார்.

இதையடுத்து கோவிந்தன், மாணவியிடம் அத்துமீறியுள்ளார். தனக்கு ஒத்துழைக்காவிட்டால் உன்னை 10 ஆம் வகுப்பிற்கு எப்படி பாஸ்ஆகிறாய் என்று பார்ப்போம் என மிரட்டியுள்ளார். அப்போது மாணவி ஆசிரியரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் ஆசிரியரின் பிடியில் இருந்து அந்த மாணவியால் வெளியேற முடியவில்லை. மாணவர் கூச்சலிட்டும், பள்ளி வளாகத்தில் யாரும் இல்லாததால் காமக்கொடூர கணித ஆசிரியரின் பசிக்கு, மாணவி இரையாகியுள்ளார். இதுகுறித்து யாரிடமாவது கூறினால், உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

பாடப்புத்தகம் வாங்க சென்ற இடத்தில் நிகழ்ந்த சம்பவத்தால் நிலைகுலைந்த மாணவி, வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், கோவிந்தன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளா் லதா, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கணித ஆசிரியர் கோவிந்தனை போக்சோசட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You'r reading வகுப்பறையில் வைத்து மாணவியை கற்பழித்த ஆசிரியர்…! தருமபுரி அருகே அதிர்ச்சி…! Originally posted on The Subeditor Tamil

More Dharmapuri News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை