வேலூரில் கன்டெய்னர் மீது மோதிய காய்கறி லாரி - நள்ளிரவில் உயிரை பறிகொடுத்த இருவர்!

two died in vellore accident

by Sasitharan, Feb 27, 2019, 00:38 AM IST

வேலூரில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அடுத்த அரப்பாக்கம், தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது காய்கறி லோடுடன் பின்பக்கமாக அதிவேகத்தில் வந்த லாரி முந்திச்செல்ல முயன்றபோது, மோதியது. காய்கறி ஏற்றிக்கொண்டு சென்னை வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில், பின்பக்க லாரியில் இருந்த பாஸ்கர், கோபி ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினகிரி போலீஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து காரணமாக, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 

 

You'r reading வேலூரில் கன்டெய்னர் மீது மோதிய காய்கறி லாரி - நள்ளிரவில் உயிரை பறிகொடுத்த இருவர்! Originally posted on The Subeditor Tamil

More Local news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை