பிரதமர் மோடியை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்ட மதிமுக நிர்வாகி கைது !

Prime Minister criticized Modi on Facebook posted Mdmk arresting administrator!

by Nagaraj, Jan 27, 2019, 10:11 AM IST

பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் விமர்சித்த மதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் மதுரைப் பயணத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வளைதளங்களில் விமர்சனங்களும், கருத்துக்களும் பரவி உலக அளவில் டிரெண்ட் ஆகி பரபரப்பாகி வருகிறது. இந்நிலையில் மோடியை பேஸ்புக்கில் தவறாக சித்தரித்து விமர்சித்ததாக கும்பகோணம் நகர மதிமுக செயலாளர் பாலு என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மோடி பற்றிய சமூக வலைத்தள பதிவுகளை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் பலர் மீது நடவடிக்கைகள் பாயும் என்றும் தெரிகிறது.

You'r reading பிரதமர் மோடியை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்ட மதிமுக நிர்வாகி கைது ! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை