ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சியில் என்டிஆர் மருமகன் ஐக்கியம்!
NTRs son-in-law united in Jagan Mohan party in Andhra Pradesh
ஆந்திர மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் என்டிஆரின் மருமகனுமான வெங்கடேஸ்வரராவ், ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைந்துள்ளார்.
இன்று ஹைதராபாத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டியைச் சந்தித்து டகுபதி வெங்கடேஸ்வர ராவ் அக்கட்சியில் இணை்ந்தார். சமீபத்தில் தான் வெங்கடேஸ்வரராவின் மகன் ஹிதேஷ் செந்துரமும் ஜெகன் கட்சியில் இணைந்தார்.
ஜெகனின் அரசியல் நடவடிக்கைகள் தம்மைக் கவர்ந்ததால் மகனைத் தொடர்ந்து தாமும் அக்கட்சியில் இணைந்ததாக வெங்கடேஸ்வரராவ் தெரிவித்தார். டகுபதி வெங்கடேஸ்வரராவின் மனைவியும் என்டிஆரின் மகளுமான புரந்தேஸ்வரி மாநில பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
You'r reading ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சியில் என்டிஆர் மருமகன் ஐக்கியம்! Originally posted on The Subeditor Tamil
More India News
READ MORE ABOUT :