சிபிஐ தற்காலிக இயக்குநருக்கு எதிரான வழக்கு - விசாரிக்க மறுத்து 3-வது நீதிபதியும் விலகல்!

சிபிஐ இயக்குநர் பதவி சர்ச்சை முடிந்த பாடில்லை ... நாகேஸ்வரராவை தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாக 3-வது நீதிபதியும் அறிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா முதலில் விடுப்பில் அனுப்பப் Uட்டார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் இயக்குநர் பதவியில் அமர்ந்தார். ஆனால் உடனடியாக சிபிஐ இயக்குநர் பதவியை பறித்து தீயணைப்பு துறைக்கு மாறுதல் செய்தது பிரதமர் மோடி தலைமையிலான சிறப்புக் குழு .

தொடர்ந்து சிபிஐயின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். நாகேஸ்வர ராவ் நியமனம் செல்லாது என உச்சநீதிமன்றத்தில் பொதுநலவழக்கை என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று தொடர்ந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. புதிய இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தாம் இருப்பதை காரணம் காட்டி வழக்கை தமக்கு அடுத்த நீதிபதியான ஏ.கே.சிக்ரியை விசாரிக்குமாறு கூறினார்.

ஏ.கே.சிக்ரியும் எவ்வித காரணமும் கூறாமல் தாமும் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று விலகிவிட நீதிபதி ரமணா விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று தாமும் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என நீதிபதி ரமணா விலகியுள்ளார். இதற்கு ரமணா சொன்ன காரணம், சிபிஐ தற்காலிக இயக்குநர் நாகேஸ்வரராவின் மகள் திருமணத்தில் பங்கேற்றது தானாம்.

அலோக் வர்மா இடத்தில் புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு செய்வதில் பிரதமர் மோடி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய 3 பேர் குழுவில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இழுபறியாக உள்ளது. இந்நிலையில் நாகேஸ்வரராவை தற்காலிகமாக நியமித்ததை எதிர்க்கும் வழக்கை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் அடுத்தடுத்து விலகியது சர்ச்சையாகி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds