கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை - 5 அதிகாரிகள் குழுவை நியமித்தது சிபிஐ!

சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த 5 அதிகாரிகள் குழுவை சிபிஐ தயார் செய்துள்ளது.

சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பான விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி அவருடைய வீட்டில் சோதனை நாத்த சிபிஐ அதிகாரிகள் சென்றனர். இதை மாநில போலீசாரைக் கொண்டு தடுத்ததுடன் சிபிஐ அதிகாரிகளையும் கைது செய்தது மம்தா அரசு. மேலும் சிபிஐ-ஐ மத்திய அரசு ஏவி விடுகிறது .மாநில உரிமைகள் பறி போகிறது என்று மம்தா தர்ணா நடத்தினார்.

இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் முறையிடப்பட்டது. போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். ஊழல் தொடர்பான ஆவணங்களை தர மறுக்கிறார். தடயங்களை அழிக்கப் பார்க்கிறார் என்று சிபிஐ தரப்பு குற்றச்சாட்டு வைத்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதித்ததுடன், ராஜீவ்குமாரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார். ராஜீவ்குமாரும் விசாரணைக்கு ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விசாரணையை மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. டெல்லியில் சிபிஐ இயக்குநர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில், ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த பர்தன் என்ற அதிகாரி தலைமையில் 5 சிபிஐ அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டது. ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் விரைவில் விசாரணை றடைபெற உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds