Advertisement

வாட்ஸ்அப்பை பொய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினால் தடை தான் - இந்திய அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை!

இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் அவதூறு,பொய் பிரச்சாரம் செய்வதில் அரசியல் கட்சிகள் அத்துமீறுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வாட்ஸ் அப் தடை செய்யப்படும் என அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எளிதில் தொர்பு கொள்ளுதல், ஒட்டு மொத்தமாக செய்திகளை பரப்புதல் எளிது என்பதால் நாளுக்கு நாள் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எந்தளவுக்கு நல்ல விஷயங்களுக்கு பயன்படுகிறதோ அதே அளவுக்கு வாட்ஸ்அப் மூலம் பல்வேறு அவதூறு மற்றும் பொய்ப் பிரசாரமும் செய்யப்படுகிறது.

வாட்ஸ் அப்பை உலக அளவில் 150 கோடிப் பேர் பயன்படுத்துகின்றனர் இந்தியாவில் மட்டும் 20 கோடி பேர் பயன்படுத்தி இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதே போல் வாட்ஸ்அப்பை தவறாகப் பயன்படுத்துவதில் இந்திய அரசியல் கட்சிகள் தான் உலக அளவில் முதலிடம் வகிக்கின்றன. இது குறித்து வாட்ஸ் அப் கடந்த ஆண்டே அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் கடந்த ஆண்டு இறுதியில் கடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் தேர்தல் பிரச்சாரத்திற்காக, ஒருவர் மீது ஒருவர் அவதூறு பரப்புவதற்காக பெருமளவில் வாட்ஸ் அப் பயன்படுத்தியுள்ளது அந்நிறுவனத்துக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்திய அரசியல் கட்சிகளுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி கார்ல் ஊக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், வாட்ஸ் அப் ஒன்றும் ஒளிபரப்பு சாதனம் அல்ல. வாக்காளர்களைக் கவர இந்திய அரசியல் கட்சிகள் பிரச்சாரம், மொத்தமாக செய்திகளை, அவதுறு களை பரப்புவது கவலை அளிக்கிறது. பல முறை எச்சரித்தும் இந்திய அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது.
இதே போன்று பிரேசிலில் தேர்தலின் போது வாட்ஸ் அப்பை தடை செய்ய நேரிட்டது. அதே போன்ற நிலைப்பாட்டை இந்தியாவிலும் எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

வாட்ஸ்அப்பை தவறாக பயன்படுத்துவோரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மாதத்துக்கு 20 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாகவும் கார்ல் ஊக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க
free-land-in-kashmir-for-sri-lankan-cricketer-muralitharan-jammu-and-kashmir-government-in-controversy
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளீதரனுக்கு காஷ்மீரில் இலவச நிலம்: சர்ச்சையில் ஜம்மு காஷ்மீர் அரசு
what-the-police-did-in-the-middle-of-the-road-in-a-bmw
பி.எம்.டபிள்யூவில் வந்து சாலையின் மத்தியில் செய்த காரியம்... தட்டி தூக்கிய போலீஸ்
champions-trophy-betting-alone-is-worth-rs-5-000-crore-mistletoe-caught-in-delhi
சாம்பியன்ஸ் டிராபி : பெட்டிங் மட்டும் 5 ஆயிரம் கோடி டெல்லியில் சிக்கிய புல்லுருவிகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்

READ MORE ABOUT :