வாட்ஸ்அப்பை பொய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினால் தடை தான் - இந்திய அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை!

இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் அவதூறு,பொய் பிரச்சாரம் செய்வதில் அரசியல் கட்சிகள் அத்துமீறுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வாட்ஸ் அப் தடை செய்யப்படும் என அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எளிதில் தொர்பு கொள்ளுதல், ஒட்டு மொத்தமாக செய்திகளை பரப்புதல் எளிது என்பதால் நாளுக்கு நாள் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எந்தளவுக்கு நல்ல விஷயங்களுக்கு பயன்படுகிறதோ அதே அளவுக்கு வாட்ஸ்அப் மூலம் பல்வேறு அவதூறு மற்றும் பொய்ப் பிரசாரமும் செய்யப்படுகிறது.

வாட்ஸ் அப்பை உலக அளவில் 150 கோடிப் பேர் பயன்படுத்துகின்றனர் இந்தியாவில் மட்டும் 20 கோடி பேர் பயன்படுத்தி இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதே போல் வாட்ஸ்அப்பை தவறாகப் பயன்படுத்துவதில் இந்திய அரசியல் கட்சிகள் தான் உலக அளவில் முதலிடம் வகிக்கின்றன. இது குறித்து வாட்ஸ் அப் கடந்த ஆண்டே அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் கடந்த ஆண்டு இறுதியில் கடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் தேர்தல் பிரச்சாரத்திற்காக, ஒருவர் மீது ஒருவர் அவதூறு பரப்புவதற்காக பெருமளவில் வாட்ஸ் அப் பயன்படுத்தியுள்ளது அந்நிறுவனத்துக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்திய அரசியல் கட்சிகளுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி கார்ல் ஊக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், வாட்ஸ் அப் ஒன்றும் ஒளிபரப்பு சாதனம் அல்ல. வாக்காளர்களைக் கவர இந்திய அரசியல் கட்சிகள் பிரச்சாரம், மொத்தமாக செய்திகளை, அவதுறு களை பரப்புவது கவலை அளிக்கிறது. பல முறை எச்சரித்தும் இந்திய அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது.
இதே போன்று பிரேசிலில் தேர்தலின் போது வாட்ஸ் அப்பை தடை செய்ய நேரிட்டது. அதே போன்ற நிலைப்பாட்டை இந்தியாவிலும் எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

வாட்ஸ்அப்பை தவறாக பயன்படுத்துவோரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மாதத்துக்கு 20 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாகவும் கார்ல் ஊக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :