ஆளுநர் கிரண்பேடியுடன் 4 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா வாபஸ்!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார். ஆளுநர் கிரண்பேடியுடன் 4 மணி நேரத்திற்கும் மேல் பேச்சுவார்த்தைக்குப் பின் நாராயணசாமி போராட்டத்தைக் கைவிட்டார்.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி,மாநில அரசின் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார், தன்னிச்சையாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டி நாராயணசாமி ஆளுநர் மாளிகை எதிரே 6 நாட்களாக தமது அமைச்சரவைச் சகாக்களுடன் தர்ணா நடத்தி வந்தார். நேற்று ஆளுநர் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முதல்வர் நாராயணசாமி நிபந்தனை விதிக்க இழுபறியானது.

ஒரு வழியாக இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மற்றும் முதல்வர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அமைச்சர்கள் மற்றும் அனைத்துத் துறை செயலர்களும் பங்கேற்றனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடைபெற்று ஒரு வழியாக சமரசம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 நாள் தர்ணா போராட்டத்தை முதல்வர் நாராயணசாமி கைவிடுவதாக அறிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds