`பாகிஸ்தானுக்கு நாங்க சளைச்சவங்க இல்ல - இம்ரான் கானை போல் சவுதி இளவரசரை வரவேற்ற மோடி!

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் டெல்லி வந்துள்ளார். அவருக்கு மத்திய அரசு உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒருவாரகால அரசுமுறைப் பயணமாக ஆசிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளார். அதன்படி முதலில் இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றார். பாகிஸ்தானின் முக்கிய நட்பு நாடாக சவுதி விளங்கி வருகிறது. இதனால் அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் வரும்போதே அவர் விமானத்துக்கு பின்புறமாக ராணுவ விமானங்கள் பறக்கவைக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வானிலே இந்தப் பாதுகாப்பு என்றால் தரையில் சொல்லவே தேவையில்லை. சல்மான் பாகிஸ்தானில் இறங்கியதும் வழக்கமான அரசின் புரோட்டாகால் நடைமுறைகளுக்கு மாறாக வரவேற்பு நிகழ்வுக்காக பிரதமர் இம்ரான் கானே விமான நிலையம் சென்றார்.

அங்கு சல்மானுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார். பின்னர் சல்மானை அரசு மாளிகைக்கு கூப்பிட்டு வரும்போது தன்னுடைய காரிலேயே அவரை அழைத்து வந்ததுடன் தானே டிரைவராக இருந்து காரை ஒட்டி வந்தார் இம்ரான் கான். வழிநெடுகிலும் சல்மானை வரவேற்று மிகப்பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எல்லாம் ஒருபடி மேலாக பாகிஸ்தானின் மிக உயரிய சிவிலியன் விருதான `நிஷான்-இ-பாகிஸ்தான்’-ஐ சல்மானுக்கு வழங்கி கௌரவப்படுத்தினார் இம்ரான்.

இதற்கிடையே, பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது இந்தியா வந்துள்ளார் பின் சல்மான். தனி விமானம் மூலம் இன்று இரவு சுமார் 9 மணியளவில் டெல்லி வந்தார். பாகிஸ்தானுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல பிரதமர் மோடியும், டெல்லி விமான நிலையத்துக்கே சென்று சல்மானை வரவேற்றார். படை, பரிவாரங்களுடன் செல்வது போல் தனது அதிகாரி படைகளுடன், மேள தாளங்கள் முழங்க சல்மானை வரவேற்றார் மோடி. சல்மான் விமானத்தை விட்டு இறங்கியதும் அவரை கட்டித்தழுவி வரவேற்றார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சவுதி இளவரசர் சல்மான் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, தீவிரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds