அத்தை மகளை பாலியல் பலாத்காரம் செய்த சகோதரர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
Brothers Get 20 Years in Jail For Raping Cousin Sister
மும்பை, பாஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், தங்களது அத்தை மகளை கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.
சம்பவம் நடந்த 2017-ம் ஆண்டு, 23வயது மற்றும் 21 வயது நிரம்பிய அந்த சகோதரர்கள் தங்களது உறவினர் பெண்ணான 19வயது இளம்பெண்ணை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் 14வயது தங்கையையும் அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக நடந்த வழக்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு முழுமையாக முடிந்த நிலையில், கடந்த வெள்ளியன்று 19வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு சகோதரர்களுக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
14வயது சிறுமியை பலாதகாரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அந்த இரண்டு சகோதரர்களுக்கும் மேலும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
You'r reading அத்தை மகளை பாலியல் பலாத்காரம் செய்த சகோதரர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை Originally posted on The Subeditor Tamil
More India News