முசிறியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை

3 family members were burnt to death

Apr 20, 2019, 15:17 PM IST

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கருங்காளி ஊர் உடையார்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி நாகராணி. இவர்களுக்கு குணா(வயது 8) மற்றும் சந்தோஷ் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.


இந்நிலையில் நேற்றுமுன்தினம் இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நாகராணி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அவர் மீதும் மகன்கள் மீதும் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டனர் . அப்போது அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில் மூத்த மகன் குணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாகராணி மற்றும் சந்தோசை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை: குழந்தை திருமணம் காரணமா?

You'r reading முசிறியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை