பரிசுகள் தருவதால் ஓட்டுகளையும் தருவார்கள் என பகல் கனவு காணவேண்டாம் மோடிக்கு மம்தா பதிலடி!

Bengalis dont put a single vote for Modi in upcoming elections

by Mari S, Apr 25, 2019, 10:54 AM IST

இனிப்புகளையும் குர்த்தாக்களையும் வழங்குவதால், ஓட்டுகளும் மோடிக்கு கிடைக்கும் என பகல் கனவு காணவேண்டாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருடன் நேற்று பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்தினார். அரசியல் அல்லாத பேட்டி என்று கூறி, மோடி அளித்த பேட்டியில், மறைமுகமாக பல அரசியல் கருத்துகள் பகிரப்பட்டன.

அந்த பேட்டியின் போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனக்கு ஆண்டுதோறும் குர்த்தாக்களை வழங்கி வருகிறார் என அவருடன் இருக்கும் நட்பு குறித்து மோடி பேசினார்.

மோதியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிலளித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இனிப்புகள் மற்றும் குர்த்தாக்கள் போன்ற பரிசுப் பொருட்களை கொடுப்பது பெங்காலிகளின் வழக்கம். ஆனால், வரும் தேர்தலில் மோடிக்கு பெங்காலி மக்களிடம் இருந்து ஒரு ஓட்டுக் கூட கிடைக்காது என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வாரணாசியில் நாளை வேட்பு மனு ; பிரியங்கா எதிர்ப்பாரா...?-நீடிக்கும் சஸ்பென்ஸ்

You'r reading பரிசுகள் தருவதால் ஓட்டுகளையும் தருவார்கள் என பகல் கனவு காணவேண்டாம் மோடிக்கு மம்தா பதிலடி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை