பாஜக ஆட்சி அமைத்து விடக் கூடாது..! வரிந்து கட்டும் சந்திரபாபு நாயுடு..! ராகுல் காந்தியுடன் முக்கிய ஆலோசனை

பாஜகவை வீழ்த்துவதற்காக எந்த சமரசத்திற்கும் தயார் என்று இறங்கியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர்களை வரிசையாக சந்திக்கத் தொடங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களை அணிதிரட்டுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாய்க்கு வந்து விட்டது. அடுத்த கட்டமாக மத்தியில் ஆட்சி அமைக்கும் வியூகங்களை வகுப்பதில் பாஜகவும், காங்கிரசும் தீவிரம் காட்டத் துவங்கி விட்டன. பாஜகவை எந்த விதத்திலும் மீண்டும் ஆட்சியமைக்க விடக் கூடாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கங்கணம் கட்டி செயல்படத் தொடங்கி விட்டார். இதற்காக தனது பரம எதிரியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உட்பட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயார் என்றும் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து கருத்து தெரிவித்தார். பரம எதிரியான சந்திரசேகர ராவுடன் கூட கூட்டணி வைக்க தாம் தயார் என்று அறிவித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தும் சந்திரபாபு நாயுடு முக்கிய ஆலோசனை நடத்தினார். வரும் 23-ந் தேதி டெல்லியில் நடக்க உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் குறித்து சந்திரபாபு நாயுடு முக்கிய ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

ராகுல்காந்தியுடனான சந்திப்புக்கு பிறகு, அடுத்தடுத்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.. இதில் சமீபத்திய மே.வங்கத்தில் பாஜகவின் வன்முறையால் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ள மம்தா பானர்ஜி, காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மே 23-ல் டெல்லியில் காங். கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் - மு.க.ஸ்டாலினுக்கு சோனியா அழைப்பு!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds