டெல்லி உள்பட 13 இடங்களில் வருமான வரித் துறை ரெய்டு அரசியல் புள்ளிகள் சிக்குகின்றனர்

டெல்லி உள்பட 13 இடங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்புடைய ‘குரூப்’ நிறுவனத்தின் 200 கோடி கறுப்பு பணச் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஹரியானா, இமாச்சலப் பிரதேசத்தில் 13 இடங்களில் நேற்று(ஜூலை28) வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்புடைய ஒரு ‘குரூப்’ நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

கறுப்பு பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் காட்டாமல் ரூ.200 கோடிக்கு வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளும், ரூ.30 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக கணக்கில் காட்டப்படாமல் சேர்க்கப்பட்ட வருமானத்தில் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு சொர்க்கமாக விளங்கும் வெளிநாடுகளின் டிரஸ்ட்கள் மற்றும் கம்பெனிகள் பெயரில் அந்த கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பனாமா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வருமான வரித் துறை சட்டம் மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு நேரடி வரிவிதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

பாஜக தலைவர்களின் சொத்துக்களை பாருங்க... மாயாவதி கடும் கோபம்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds