உபா சட்டத்தை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு : சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை(உபா) எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பதிலளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில்(உபா) சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பழைய சட்டத்தின் கீழ் ஒரு இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இந்தியாவில் அதன் செயல்பாட்டுக்கு தடை விதிக்கலாம். மேலும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம். புதிய சட்டத்தின்படி, ஒரு இயக்கத்தை மட்டுமின்றி, தனி ஒருவரைக் கூட பயங்கரவாதியாக அறிவிக்கலாம். அப்படி அறிவித்தால், அவர் மீது எந்நேரத்திலும் நடவடிக்கை எடுக்கலாம்.

புதிதாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ் சயீத், ஜாகிர் ரெஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகியோரை பயங்கரவாதிகளாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை(உபா) எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாஜல் அவஸ்தி என்ற தொண்டு நிறுவனமும், சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கமும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

இம்மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதி அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. புதிய சட்டத்தின் கீழ் யாரையும் பயங்கரவாதியாக அறிவித்து, அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து பாதிப்படையச் செய்ய முடியும். பயங்கரவாதத்தை தடுக்கும் போர்வையில், அரசுக்கு எதிரானவர்கள் மீது மறைமுகமாக கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டம்தான் உபா சட்டம். எனவே, ஜனநாயகத்திற்கு பாதிப்பு வராமல் தடுக்க இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்குமாறு கூறி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds