பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி..

பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை மாலை சந்திக்கிறார். இது தேசிய அரசியலில் பல்வேறு யூகங்களை இப்போதே கிளப்பி வருகிறது.

மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் மிகக் கடுமையாக விமர்சித்தவர். காங்கிரஸ் தலைமையை மற்ற எதிர்க்கட்சிகள் ஏற்காத நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பவராக மம்தா திகழ்ந்தார். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் திடீரென பாஜகவே 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

இதன்பின், பிரதமராக மோடி 2வது முறையாக பொறுப்பேற்கும் முன்பே மம்தா பானர்ஜிக்கு பாஜக குறிவைத்தது. அந்தக் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று கவுன்சிலர்கள் வரை பாஜகவுக்கு இழுக்கப்பட்டனர். மம்தா செல்லும் இடங்களில் வேண்டுமென்றே பாஜகவினர் கூடி நின்று, ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பி வெறுப்பேற்றினர். ஆனாலும், மம்தா பானர்ஜி கடுமையாக குரல் கொடுத்து வந்தார்.

இதற்கிடையே, சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரான ராஜீவ்குமாருக்கு சிபிஐ நெருக்கடி கொடுத்தது. இது வரை அவரை காப்பாற்றி வந்த மம்தா பானர்ஜியால் தொடர்ந்து அவரை சிபிஐ விசாரணையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. ராஜீவ்குமாரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரித்து விட்டன. தற்போது எந்நேரத்திலும் அவரை சிபிஐ கைது செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியை நாளை மாலை 4.30 மணிக்கு அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி சந்திக்கவிருக்கிறார். இதற்காக இன்றே அவர் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு செல்கிறார். இந்த சந்திப்பிற்கு பிறகு, பாஜக பக்கமாக திரிணாமுல் சாயலாம் என்றும், காங்கிரஸை தனிமைப்படுத்தி முழுமையாக அழித்து விட பாஜக நினைக்கிறது என்றும் அரசியல் வட்டாரங்களில் யூகங்கள் கிளம்பியுள்ளது.

ஆனால், இது பற்றி திரிணாமுல் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், மம்தா பானர்ஜி நிர்வாக விஷயங்களுக்காகவே பிரதமரை சந்திக்கிறார். பிரதமர் 2வது முறை பொறுப்பேற்ற பிறகு அவரை சந்திக்க முதல்வர் மம்தா அப்பாயின்மென்ட் கேட்டிருந்தார். இப்போதுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், மாநில தேவைகள் குறித்தும், மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரதமரிடம் மம்தா பேசுவார். அரசியல் எதுவும் பேச மாட்டார் என்று தெரிவித்தார்.

அதே சமயம், மார்க்சிஸ்ட் உள்பட மற்ற கட்சியினர், இப்போது பிரதமரை மம்தா பானர்ஜி சந்திப்பதே ராஜீவ்குமாருக்கு உள்ள நெருக்கடியால்தான். அவர்தான் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் மம்தாவுக்கு நெருக்கமானவர்களுக்கு உடந்தையாக இருந்தார். எனவே, அவர் கைதானால் அது தன்னையும் பாதிக்கும் என்பதால், பிரதமரை அவர் சந்திக்கிறார் என்று பேசுகின்றனர்.

எனவே, நாளை பிரதமரை சந்தித்து விட்டு மம்தா அளிக்கும் பேட்டியில் அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் உள்ளதா என்பது தெரிய வரும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds