காந்தி ஜெயந்தி யாத்திரையில் சோனியா, பிரியங்கா பங்கேற்பு..

sonia, rahul to lead gandhi jeyanthi march

by எஸ். எம். கணபதி, Sep 27, 2019, 09:50 AM IST

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளன்று காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பாதயாத்திரைகள் நடத்தப்படவுள்ளது. இதில், சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

காந்தியின் பிறந்த நாளான அக்.2ம் தேதியை காந்தி ஜெயந்தியாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு அக்.2ம் தேதியன்று மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தி அன்று நாடு முழுவதும் பாதயாத்திரைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் யாத்திரையில் சோனியாவும், வார்தாவில் நடைபெறும் யாத்திரையில் ராகுல்காந்தியும், உத்தரபிரதேசத்தில் நடைபெறும் யாத்திரையில் பிரியங்கா காந்தியும் பங்கேற்க உள்ளனர். மேலும், நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துமாறு மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

You'r reading காந்தி ஜெயந்தி யாத்திரையில் சோனியா, பிரியங்கா பங்கேற்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை