தெலங்கானா பஸ் ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்..

தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் தலைமையில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தங்களை அரசு ஊழியர்களாக்குவது உள்பட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிகை் செய்து வருகின்றனர். ஆனால், முக்கிய கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாததால், அவர்களிடம் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது.

இதையடுத்து, அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் 50 சதவீத வழித்தடங்களை தனியாருக்கு விட்டு கொடுக்க அரசு முடிவெடுத்தது. மேலும், தனியார் பஸ்களை இயக்க அனுமதியும் அளித்தது. இதனால், அரசு பஸ் ஊழியர்கள் கடும் கோபமடைந்து மேலும் தீவிரமாக போராடினர். அரசும் பிடியை விட்டு கொடுக்காமல் 45 ஆயிரம் பேரை டிஸ்மிஸ் செய்தது.

இது தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சுமுகமான உடன்பாடு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதிகள் 3 பேர் குழுவை நியமிப்பதாக ஐகோர்ட் கூறியது. ஆனால், அதை தெலங்கானா அரசு ஏற்கவில்லை. அதற்கு தொழிலாளர் சட்டத்தில் இடமில்லை என்று கூறி மறுத்து விட்டது.

இதனால், 41வது நாளாக இன்றும் (நவ.14) போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக் நீடித்து வருகிறது. இதற்கிடையே ஊழியர்களில் 5 பேர் வரை மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்டனர். இது தொழிலாளர்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது. ஆனாலும், சந்திரசேகர ராவ் அரசு, தனது நிலையில் இருந்து இறங்கி வர மறுத்து விட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds