அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..

கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய அமலாக்கத் துறையினரின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும், அமலாக்கத் துறையின் செயல்பாட்டை கண்டித்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் சிவக்குமார். முந்தைய முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை காப்பாற்றுவதற்காக போராடியவர். ஆனாலும், 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து ஆட்சியை கவிழ்த்தனர். அதற்கு பிறகு எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.

இதற்கு பின்னர், சிவக்குமாரை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அவர் 50 நாட்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த மாதம் டெல்லி ஐகோர்ட் ஜாமீன் அளித்தது. இதை எதிர்த்து அமலாக்கத் துறையின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று(நவ.15) நீதிபதி ரோகிண்டன் நரிமன் தலைைமயிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். அப்போது நீதிபதி நரிமன் கூறுகையில், அமலாக்கத் துறை நடந்து கொள்ளும் விதம் சரியல்ல. குடிமகன்களை இப்படித்தான் நடத்துவதா? என்று கண்டனம் தெரிவித்தார்.

சரியான காரணம் இல்லாமல், அவர் தப்பி விடுவார் என்ற ரீதியில் ஜாமீனை ரத்து செய்யக் கோரியதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மனுவை தள்ளுபடி செய்யக் கூடாது என்று வாதாடிய துஷார் மேத்தாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds