குடியுரிமை சட்ட திருத்த மசோதா... சிவசேனா எதிர்க்க முடிவு

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மதியம் 2 மணிக்கு விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு ஆதரவளிக்க 2 நிபந்தனைகளை சிவசேனா விதித்துள்ளது. நிபந்தனைகளை ஏற்காவிட்டால் எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் டிச.9ம் தேதி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், பாஜகவுக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளதால் மசோதா எளிதாக நிறைவேறியது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் சிவசேனா, மக்களவையில் இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலாகும். இதை ஆதரிப்பவர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் அஸ்திவாரத்தை குலைப்பவர்கள் என்று விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், இந்த மசோதா மீது எந்த ஒரு குடிமகனுக்கு அச்சம் ஏற்பட்டாலும் அதை நாம் போக்க வேண்டியது அவசியம். இந்த சட்டத்தை ஆதரிக்காதவர்களை தேசத்துரோகிகள் என்று நோக்கம் கற்பிப்பதுதான் பாஜகவின் வேலை. ஏதோ பாஜக மட்டுமே நாட்டை பாதுகாப்பது போல் பேசுகிறார்கள். அந்த போக்கை மாற்ற வேண்டும். நாங்கள் இந்த மசோதாவில் சில திருத்தங்களை அளித்துள்ளோம். அதை நிறைவேற்றினால் மட்டுமே மாநிலங்களவையில் இதை ஆதரிப்போம். இல்லாவிட்டால் எதிர்த்து வாக்களிப்போம் என்றார். வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை அளித்தாலும் 25 ஆண்டுகளுக்கு வாக்குரிமை தரக் கூடாது, இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்த வேண்டும் என்று சிவசேனா நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்த மசோதா இன்று (டிச.11) மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையில் விவாதிக்கப்பட உள்ளது. பாஜகவுக்கு 83, ஜே.டி.யு. 6, அகாலிதளம் 3, எல்ஜேபி 1, ஆர்பிஐ 1 மற்றும் 11 நியமன உறுப்பினர்கள் என தே.ஜ.கூட்டணியின் 105 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இது தவிர, அதிமுக 11, பிஜுஜனதா தளம் 7 தெலுங்குதேசம் 2, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 2 மற்றும் பாமக, நாகா மக்கள் முன்னணி, போடாலாந்து மக்கள் முன்னணி தலா 1 என்று மொத்தம் 128 உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஜே.டி.யூ, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds