கோத்ரா ரயில் எரிப்புக்கு பின் நடந்த கலவரங்கள்.. நானாவதி கமிஷன் அறிக்கை வெளியீடு...

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டில் நடந்த கலவரங்கள், தூண்டிவிடப்பட்டதல்ல என்றும், அப்போதைய மோடி அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டில் அயோத்தியில் கரசேவைக்கு சென்ற பக்தர்கள், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் திரும்பிக் கொண்டிருந்தனர். கோத்ரா ரயில் நிலையம் அருகே ஒரு கும்பல் அந்த ரயிலுக்கு தீ வைத்தது. இதில், 59 ராமபக்தர்கள் உடல் கருகி இறந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் கலவரங்கள் வெடித்தன. இந்து, முஸ்லீம் மோதலில் சுமார் 2 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். 750 முஸ்லீம்கள், 254 இந்துக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதாக கூறப்பட்டது. அந்த கலவரத்தை அப்போதைய மோடி அரசாங்கமே தூண்டிவிட்டதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி நானாவதி, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அக்‌ஷய் மேத்தா ஆகியோர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அளித்த அறிக்கையில் கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்ட சதி என்று கூறப்பட்டது. இந்த அறிக்கை கடந்த 2008ம் ஆண்டு அரசிடம் அளிக்கப்பட்டது.

இதன் பின்னர், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற கலவரங்கள் குறித்து நானாவதி-மேத்தா கமிஷன் விசாரணை நடத்தி வந்தது.
பெரும்பாலும் சிறுபான்மையினர் கொல்லப்பட்ட அந்த கலவரத்தின் விசாரணை சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்றது. விசாரணை கமிஷனுக்கு 24 முறை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டது.

அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, அவரது அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், மற்றும் சில இயக்கங்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டது.
இதன்பின்னர், விசாரணை அறிக்கையை கடந்த 2014ம் ஆண்டில் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேலிடம் நீதிபதி நானாவதி கமிஷன் சமர்பித்தது. சுமார் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த விசாரணை கமிஷன் இறுதி அறிக்கை, குஜராத் மாநில சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள், தூண்டிவிடப்பட்டவை அல்ல என்றும், கலவரங்களுக்கும் அப்போதைய மோடி அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds