குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது.. வதந்திகளை நம்பக் கூடாது.. பிரதமர் மோடி வேண்டுகோள்..

குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியுரிைம திருத்தச் சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இதற்கிடையே, ஜமியா பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியதாக பிரச்னை கிளம்பி, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:


குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பல்வேறு கட்சிகளும், எம்.பி.க்களும் ஆதரவு அளித்துதான் நிறைவேற்றப்பட்டது. பல நூறாண்டுகளாக இந்த நாடு பின்பற்றி வரும் ஏற்புடைமை, நல்லிணக்கம், இரக்கம் மற்றும் சகோதரத்துவம் போன்ற கலாசாரத்தின் அடிப்படையில்தான் இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

நாட்டில் உள்ள எந்த மதத்தை சேர்ந்த எவருக்கும் இந்த சட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை எனது உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தின் மீது எந்தவிதத்திலும் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

நீண்ட காலமாக வெளிநாடுகளில் மத துன்புறுத்தலுக்கு பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கும், இந்தியாவை தவிர வேறு போக்கிடம் இல்லாதவர்களுக்காகவே இந்த சட்டம் வந்துள்ளது.
ஜனநாயகத்தில் விவாதங்களும், எதிர்ப்புகளும் இருக்கலாம். அதேசமயம், பொது சொத்துகளை சேதப்படுத்துவது, மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு செய்வது ஆகியவற்றுக்கு இந்திய பண்பாட்டில் இடமில்லை. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சில சுயநல சக்திகள் நம்மை பிளவுபடுத்தி, இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.

அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக, குறிப்பாக ஏழை, எளியவர்களின் வளர்ச்சிக்காக நாம் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. அதனால், வதந்திகளுக்கும், தவறான தகவல்களுக்கும் ஆட்படாமல், வதந்திகளை பரப்புவோரிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :