வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்கும்.. பீதியில் ஜே.எம்.எம். மனு..

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று(டிச.23) காலை தொடங்குகிறது. இதற்கிடையே வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்குமோ என்று ஜே.எம்.எம். கட்சி பயப்படுகிறது. இதையடுத்து, 150 ஒப்பந்த இன்ஜினியர்களை வாக்கு இயந்திரத்தை தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கோரி மனு கொடுத்துள்ளது.

ஜார்க்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான ஆளும் பாஜக முதல் முறையாக தனித்து போட்டியிடுகிறது. அதை எதிர்த்து ஜே.எம்.எம் கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் 2 கணிப்புகள், ஜே.எம்.எம். தலைமையிலான காங்கிரஸ், ஆர்.ஜே.டி கட்சிகளின் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா டுடே-ஆக்ஸிஸ் வெளியிட்ட கணிப்பில் ஜே.எம்.எம். கூட்டணி 38 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டிருக்கிறது. சி வோட்டர்- ஏ.பி.பி. கணிப்பில் பாஜகவுக்கு 28 முதல் 36 இடங்களே கிடைக்கும் என்பதால் மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறப்பட்டிருக்கிறது.

அதே சமயம், பாஜக மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 65 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைப்போம் என்று உறுதியாக கூறி வந்தது. இதையடுத்து, ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜே.எம்.எம். கட்சிக்கு திடீர் பீதி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா தலைமையில் அக்கட்சி குழுவினர் நேற்று(டிச.22) இணைத் தலைமை தேர்தல் அதிகாரி கே.என்.ஜாவை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

இதன்பின், சுப்ரியோ பட்டாச்சார்யா கூறுகையில், ஆளும் கட்சி(பாஜக) வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு அளிக்கும் இயந்திரங்களை பராமரிப்பதற்கு என்று 150 இன்ஜினியர்களை தேர்தல் ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் எடுத்துள்ளது. இந்த இயந்திரங்களை பராமரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் இருந்து வருபவர்கள் தில்லுமுல்லு செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே, அரசியல் கட்சி பிரதிநிதிகள் இல்லாத சமயத்தில் அந்த இன்ஜினியர்கள் யாரையும் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :