உடுப்பி ஜீயர் விஸ்வேஷா தீர்த்த சுவாமி மரணம்.. பிரதமர் மோடி இரங்கல்

உடுப்பி பெஜாவர் மடத்தின் ஜீயர் விஸ்வேஷா தீர்த்த சுவாமி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88.

கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் ஜீயர் ஸ்ரீவிஸ்வேஷா தீர்த்த சுவாமி, வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றியிருந்தார். இன்று காலை அவர் காலமானார். இதையடுத்து, உடுப்பி மடத்தில் இருந்து அவரது உடல் பெங்களூருவில் உள்ள பசவனகுடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலமைச்சர் எடியூரப்பா இறுதி மரியாதை செலுத்தினார். பக்தர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஜீயர் விஸ்வேஷா, கடந்த 1931-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி தட்சண கன்னடா மாவட்டத்தில் ராமகுஞ்சா எனும் கிராமத்தில் நாராயணாச்சார்யா, கமலாம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்தார். தனது 8-வது வயதில் துறவு வாழ்கைக்குத் திரும்பி, ஆன்மீக விஷயங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

பின்னர், பெஜாவர் மடத்தின் 33-வது ஜீயராக பொறுப்பேற்றார். ஆன்மீகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்பட்டவர். விஸ்வ இந்து பரிஷத் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீயர் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds